பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல சீசன்களான ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் . தற்பொழுது பெரியவர்களுக்கான 8 வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீதர் சேனா என்னும் போட்டியாளர், எலிமினேட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில் அவரது எலிமினேஷனுக்கு சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்ததுடன் நன்றாக பாடி வந்த ஸ்ரீதர் சேனாவை ஏன் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினீர்கள் என்றும் நடுவர் பென்னி தயாளின் தவறான தீர்ப்பு தான், ஸ்ரீதர் சேனாவின் எலிமினேஷனுக்கு காரணம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனால் கோபமடைந்த நடுவர் பென்னி தயாள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதுடன் இனி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஓணம் பண்டிகையை குறித்து ஒரு பதிவு ஒன்றை பென்னி தயாள் வெளியிட்டிருந்தார். இதில் அவரை கடுமையாக விமர்சித்து ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ஏற்கனவே எலிமினேஷன் யார் என்று தேர்வு செய்துவிட்டீர்கள். அதே போல் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பதையும் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்றும் அதி பதிவு செய்திருந்தார். அதற்கு பென்னி தயாள், கோபமாக எதையும் கூறாது ஹாப்பி ஓணம் என பதிவிட்டு ரிப்ளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.