கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்தக் கைக்குண்டு நுளம்புச் சுருள் உதவியுன் வெடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா ஹொஸ்பிட்டலில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து இருந்து இந்தக் கைக்குண்டு கைப்பற்றப்பட்டது.
எவரால் இந்தக் கைக்குண்டு கொண்டுவரப்பட்டது என்பது பற்றி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.