எதிர்க்கட்சியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களால் மிகவும் பலம் வாய்ந்த எமது அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது.எம்மை ஆட்சிபீடமேற்றிய மக்கள் தற்போதும் எமது பக்கமே உள்ளனர் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya rajapaksh)தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்றையதினம்(19) அரச தலைவருடன் பேச்சு நடத்தினர்.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் மக்கள் கிளர்ந்தெழுந்து விட்டார்கள் என சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.ஆனால் உண்மையில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை.எதிர்க்கட்சியினர்தான் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர்.அவர்கள்தான் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.அவர்களின் ஆதரவாளர்கள்தான் அரசுக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.
இந்த எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ள எமது அரசை வீழ்த்தவோ அல்லது கவிழக்கவோ முடியாது.எம்மை ஆட்சி பீடமேற்றிய மக்கள் தற்போதும் எமது பக்கமே உள்ளனர்.
அரச தலைவர் மற்றும் பொதுத்தேர்தல்களில் நாம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது உண்மைதான்.அந்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்.
கொரோனா பெருந்தொற்றே இதற்கு காரணம்.இந்த தொற்றுக்காலத்தைப்பயன்படுத்தி எமது ஆட்சியை கவிழ்க்கலாம் என எதிர்க்கட்சியினர் முட்டாள்தனமாக சிந்திக்கின்றனர்.ஆட்சியை தீர்மானிப்பது எதிர்க்கட்சியினர் அல்ல மக்களே முடிவெடுப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
IBC