வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கும், ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதற்கும் சுகாதரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இதுவரை இரு ஆசிரியர்களுக்கும், 8 மாணவர்களுக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
TW